பள்ளிகளுக்கு இடையிலான குத்து சண்டை போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

பள்ளிகளுக்கு இடையிலான குத்து சண்டை போட்டியில், தலையில் அடிபட்டு 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்

Update: 2017-01-06 11:11 GMT
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. போட்டி இடைவேளையில், ஓய்வு நேரத்தின் போது விளையாட்டு திடலில் அமர்ந்திருந்த  மாணவி மாரீஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். அருகில் சென்று பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது.  குத்து சண்டை போட்டியில், தலையில் அடிபட்டு இருந்ததால் அவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது., முதல் முறையாக தனது மகள் போட்டியில் கலந்து கொள்வதால் மாரீஸ்வரியின் தாயாரும் போட்டியை காணவந்து இருந்தார்.

மேலும் செய்திகள்