முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள் நாளை சந்திக்க உள்ளனர்.

Update: 2017-02-27 14:42 GMT
சென்னை,

டெல்லியில், முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள் 11 பேர் எம்.பி. மைத்ரேயன் தலைமையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நாளை சந்திக்கின்றனர்.

குடியரசு தலைவர் மாளிகையில் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த சந்திப்பில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்