ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல்

ஆர்.கே.நகர் தொகுதியில் செல்வி என்பவரிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-12-17 07:04 GMT
சென்னை,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெறுகிறது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமுடன் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்வி என்பவரை போலீசார் அழைத்து சென்றனர். கைதான செல்வி தினகரன் ஆதரவாளர் என தகவல் தெரிவிக்கின்றன. செல்வி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்