சென்னையில் காலமான நடராஜனின் உடல் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது, சசிகலாவும் வந்து சேர்ந்தார்

சென்னையில் காலமான நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளார் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. #RIPNatarajan

Update: 2018-03-20 14:32 GMT
தஞ்சை,

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74.  சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடத்தப்பட்டு மாலை உடல் தகனம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா சாலை மார்க்கமாக விளார் கிராமம் வந்தடைந்தார். 

மேலும் செய்திகள்