இபிஎஸை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்? -ப.சிதம்பரம் கேள்வி

இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என ப.சிதம்பரம் கேள்வி விடுத்து உள்ளார்.

Update: 2018-05-16 10:17 GMT
சென்னை

கர்நாடக சட்டசபையில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்கு துணை முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது  கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு” என கூறினார்.

இதற்கு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது:-

கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்? 

இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்