திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியா? நடிகர் கமல்ஹாசன் பதில்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

Update: 2018-08-29 23:04 GMT
ஆலந்தூர், 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த ஊழல் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற ஊழல்கள் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த ஊழல் பழகிவிடக்கூடாது என்பதால் விசாரணை வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

தமிழக அரசு எந்த துறையில் ஊழல் நடந்தாலும் அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்?. இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகத்தான் குரல் கொடுக்கிறோம்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தற்போதைக்கு போட்டியிடும் முடிவு இல்லை. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது நியாயமான விலை குறைப்பு செய்யப்பட வேண்டும். மக்களை பாதிக்கக் கூடிய விஷயத்தில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்