பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என தெரியாத கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் உதயகுமார்

பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என தெரியாத எம்எல்ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.

Update: 2018-09-21 11:22 GMT
சென்னை:

அமைச்சர் ஆர்பி உதயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தினகரனுக்கு மக்களை பற்றி ஒன்றும் தெரியாது. மக்களை பற்றி படிக்கும் பாடத்தில் வெற்றிபெற்ற பின்பு அரசியலை தினகரன் எதிர்கொள்ளட்டும் .பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என தெரியாத எம்எல்ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக மிகச்சிறந்த அரசாக மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டை ஒரு ஆளுமைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தோடு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது மக்கள் நலன்களை பெற்று தர மத்திய அரசுடன் அதிமுக நல்லுறவுடன் செயல்பட்டு வருகிறது.

அப்போது பேசிய அவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். நடிகர் கமல்ஹாசன் நேரத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருகிறார். தேர்தல் களத்திற்கு கமல் வந்தால் அவரை சந்திக்க தயார்.

 இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்