போலியோ மருந்து குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

போலியோ மருந்து குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2018-10-06 12:28 GMT
சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ரூ.122 கோடி மதிப்பில் 72 இடங்களில் அவசர கால சிகிச்சை தொடங்கப்பட்டு வருகிறது.  கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கிய திட்டத்தினால் சாலை விபத்தில் இறப்பு 8.3%-லிருந்து 5.4%-ஆக குறைந்துள்ளது.

 போலியோ மருந்து குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது, பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்