7 பேர் விடுதலை விவகாரம்: 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப திட்டம் திருமாவளவன்

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

Update: 2018-10-07 11:48 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியார்களிடம் கூறியதாவது:

துணைவேந்தர் பதவி நியமனங்களில் லஞ்சம் புகுந்தது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப திட்டம்.

பாஜக உடன் தேர்தல் உடன்படிக்கை உறுதி செய்த பின்னர், 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்ற திட்டத்துடன் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்