டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி உள்ளார்.

Update: 2018-10-30 05:08 GMT
சென்னை

சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அமைச்சர் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மாலை அணிவித்து  உள்ளிட்டோர் மரியாதை மாலை அணிவித்து செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயகுமார்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வது அதிமுக அல்ல; தேர்தல் ஆணையம் தான் . டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை  அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அதிமுகவில் தினகரனுக்கு இடமில்லை, தினகரனை நம்பியவர்கள் பரிதாபமாக உள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. என கூறினார்

மேலும் செய்திகள்