மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.

Update: 2018-11-04 03:23 GMT
விருதுநகர்,

விருதுநகரில் உள்ள திருச்சுழியை சேர்ந்த சக்திவேல் (வயது 1) என்ற குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது.  இதனை அடுத்து சக்திவேலின் பெற்றோர் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை பன்றிக்காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தது.  பன்றிக்காய்ச்சலுக்கு 5 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் மற்றும் காய்ச்சலுக்கு 98 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்