ஓசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்; நோயாளி உள்பட 4 பேர் பலி

ஓசூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2018-11-18 01:24 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்று கொண்டு வேகமுடன் சென்று கொண்டு இருந்தது.  அது சீத்தாராம் மேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபொழுது, வழியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.  ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்