4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புயல் பாதிப்பு நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-20 01:37 GMT
திருச்சி, 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடலூர், திருவாரூர் உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், நாகை, புதுக்கோட்டை  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழை எச்சரிக்கை காரணமாக  ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்