பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி, மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி, மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சென்னை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி, மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், வேல்முருகன், கீ,வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.