தி.மு.க. வேண்டாம் என ஒதுக்கினாலும் ம.தி.மு.க., வி.சி.க. விலகும் நிலையில் இல்லை; பொன். ராதாகிருஷ்ணன்

தி.மு.க. வேண்டாம் என ஒதுக்கினாலும் ம.தி.மு.க., வி.சி.க. விலகும் நிலையில் இல்லை என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2018-12-04 15:34 GMT
சென்னை,

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தரவில்லை, ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி தரப்பட்டது என்று கூறினார்.

தொடர்ந்து அவர், தி.மு.க. வேண்டாம் என்று ஒதுக்கினாலும் ம.தி.மு.க., வி.சி.க. விலகும் நிலையில் இல்லை என கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தமிழர்கள் பற்றி பேச தகுதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்