ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது - மதுரை ஐகோர்ட் கிளை
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 21-ந்தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.