ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- “ஜெயலலிதா மரணம் குறித்து ஏற்கனவே சி.பி.ஐ., விசாரணை கேட்டேன். அப்போது விமர்சிக்கப்பட்டேன். தற்போதைய ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளியாக வாய்ப்பில்லை. எனவே உண்மை வெளிவரவேண்டுமெனில் சி.பி.ஐ., விசாரணை தேவை” என்றார்.