ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-31 15:18 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- “ஜெயலலிதா மரணம் குறித்து ஏற்கனவே சி.பி.ஐ., விசாரணை கேட்டேன். அப்போது விமர்சிக்கப்பட்டேன். தற்போதைய ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளியாக வாய்ப்பில்லை. எனவே உண்மை வெளிவரவேண்டுமெனில் சி.பி.ஐ., விசாரணை தேவை” என்றார்.

மேலும் செய்திகள்