அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தாமல் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் உடனடி தீர்வு காண வேண்டும் -ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தாமல் பிரச்சினைக்கு முதல்வர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-01-23 15:10 GMT
சென்னை,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, கடலூர், திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் #JactoGeo அமைப்பினரை, நேரில் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணாமல் அவர்களை கைது செய்து பிரச்சினையை பெரிதாக்கும் தமிழக அரசை கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தாமல், பொதுமக்களை வாட்டி வதைக்காமல் முதலமைச்சர் உடனடி தீர்வு காண வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்