அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார் - முதல்வர் பழனிசாமி

அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார் என சேலம் விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #EdappadiPalaniswami

Update: 2019-02-02 05:26 GMT
சேலம்

சேலம் கந்தம்பட்டியில் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி. சேலத்தில் மொத்தம் ரூ.40 கோடி மதிப்பில், 3 புதிய பாலம் பணிக்கு அடிக்கல்  நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பில் 4,049 பயனாளிகளுக்கு ரூ.12.26 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர்  எடப்பாடி  பழனிசாமி பேசும்போது கூறியதாவது:- 

போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. பணிகள் 5 மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் பாலம் திறக்கப்படும். 

திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது. கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார். நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசி வருகிறார்.  தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசை தடுக்க திமுக முயற்சி செய்தது. மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு தடுக்க முயன்றது திமுக என கூறினார்.

மேலும் செய்திகள்