மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் - தமிழிசை சௌந்தரராஜன்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-15 07:36 GMT
சென்னை,

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,

நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இனிப்பான செய்தியை பகிர்ந்து கொள்ளும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்