இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-16 15:43 GMT
நெல்லை,

நெல்லையில் நடைபெற்ற அ.தி.மு.க. அம்மா பேரவை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்பொழுது, எதிர்வரும் காலத்தில் இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து அவர், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களவை தேர்தலுக்கு வெற்றி கூட்டணியை அமைத்திடுவார்கள் என்றும் பேசினார்.

மேலும் செய்திகள்