1998-ல் ஜெயலலிதா அமைத்தது போல தேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம் - அ.தி.மு.க

1998-ல் ஜெயலலிதா அமைத்தது போல தேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம் என அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளனர் .

Update: 2019-02-23 05:55 GMT
சென்னை

அ.தி.மு.க  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அ.தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

1998-ல் ஜெயலலிதா அமைத்தது போல தேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம். மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி, பெண்களுக்கு முக்கியத்துவம், சமூக பொருளாதார பாதுகாப்பு, தமிழின எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணம் தொடரும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்