மதுரையில் வாகன சோதனையின் போது ரூ.4.5 கோடி பணம் பறிமுதல்

மதுரையில் வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-22 06:56 GMT
மதுரை,


திருச்சியில் இருந்து மதுரைக்கு தனியார் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.4.5 கோடி பணம், யானைக்கால் தரைப்பாலம் வழியில் பறக்கும் படையினரால் நடத்தப்பட்ட வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கனரா வங்கிக்கு சொந்தமானது என வாகனத்தில் இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர். எனினும் தேர்தல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்