தமிழகம் முழுவதுமுள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #ChennaiHighCourt

Update: 2019-05-02 09:31 GMT
சென்னை,

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நிறைந்த சூழ்நிலை உள்ளது.  இந்த நிலையில், நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் பாட்டில்களில்தான் நீரை பார்க்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கொன்றில் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும்.  அரசு, இலவசங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு பதில், வீணாகும் நீரை தடுக்க அணைகளை கட்டலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சதுப்பு நிலத்தில் அரசு அலுவலகங்கள் கட்டுவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என கூறி, பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு கட்டிடங்கள், இசை பல்கலை கழகம் ஆகியவற்றை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்து பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்திருந்தது.

நீர் சேமிப்பு பகுதிகளை பாதுகாக்காவிட்டால் தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் தொலைவில் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என நீதிபதிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்