மதுரை திருமங்கலம் அருகே 2 பிரிவினரிடையே கடும் மோதல்; வீடு, வாகனங்கள் சூறை
மதுரை திருமங்கலம் அருகே 2 பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் வீடு, வாகனங்கள் சூறையாடப்பட்டன.
மதுரை,
மதுரை திருமங்கலம் அருகே வளையப்பட்டி கிராமத்தில் இரு பிரிவினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்து உடனடியாக அங்கு வாகனங்களில் வந்த போலீசார் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அந்த கும்பலை கலைந்து போக செய்தனர்.
இந்த மோதலில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சூறையாடப்பட்டன. 8 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து நாகையாபுரம் போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.