கூட்டணி விவகாரம்: மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் - திருமாவளவன்

கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்று திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

Update: 2019-06-22 12:36 GMT
சீர்காழி,

சீர்காழியில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நாடு, தமிழக மக்களின் நலனுக்காக இதே கூட்டணி சிதறாமல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்.   இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். மழை வேண்டி யாகம் நடத்த ஒதுக்கும் தொகையை குடிநீர் தேவைக்காக செலவிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்