வேலூரில் சாலை விபத்து; 2 பேர் பலி
வேலூரில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
வேலூர்,
வேலூர் ஆம்பூர் அருகே சின்னகொமேஸ்வரம் பகுதியில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் பாலாஜி, அஜித் ஆகிய 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.