திண்டுக்கல்லில் பேருந்து விபத்து: பெண் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்
திண்டுக்கல்லில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒரு பெண் பலியானார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கொடை ரோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.