நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம்

நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.

Update: 2019-07-12 01:51 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் பிரானூர் பகுதியில் மஞ்சள் ஆலை ஒன்று உள்ளது.  ஆலையில் 4 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்றனர்.  அவர்கள் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த 4 தொழிலாளர்களை தீ விபத்தில் இருந்து மீட்டனர்.  காயங்களுடன் இருந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்