வேலூர் தொகுதி ஸ்டாலினுக்கு வெற்று கோட்டையாக போகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர் தொகுதி ஸ்டாலினுக்கு வெற்று கோட்டையாக போகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-14 13:07 GMT
சென்னை,

சென்னையை அடுத்த வாணியஞ்சாவடி மீன்வள உயிர் தொழில் நுட்ப நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு ஆணையை வழங்கிய பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- 

வேலூர் தொகுதியை வெற்றிக் கோட்டையாக்குமாறு ஸ்டாலின் அறிக்கை விடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வேலூர் திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகத்தான் அமையும்.

அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால், இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும். 

அரசு வேலைக்காக இளைஞர்கள் காத்திருக்காமல் சுயதொழில் செய்ய முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்