பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-07-19 07:24 GMT
சென்னை

சிலை கடத்தல் வழக்கை கையாளும் பொன்  மாணிக்கவேலுக்கு சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை  என்ற திமுக உறுப்பினர் ஐ பெரியசாமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது

*  பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது .

* 204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

மேலும் செய்திகள்