திண்டுக்கல்லில் சாலை விபத்து; பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் படுகாயம்
திண்டுக்கல்லில் சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்றது. அந்த வேன் பாடியூர் அருகே திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.