திருப்பூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் பழனிசாமி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2019-08-09 00:56 GMT
திருப்பூர், 

கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே, கனமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணைகள், குளங்கள், குட்டைகளுக்கு தண்ணீர் சென்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்