காஷ்மீர் விவகாரம்; ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

காஷ்மீர் விவகாரத்தினை ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.

Update: 2019-08-14 13:22 GMT
சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என கூறினார்.

சில அரசியல்வாதிகள் எதனை அரசியலாக்க வேண்டும், எதனை அரசியலாக்க கூடாது என புரிந்து கொள்ள வேண்டும்.  நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மை இல்லை என்ற நிலையில் முதலில் அங்கு காஷ்மீர் பற்றிய மசோதாவை நிறைவேற்றி விட்டு பின்பு, மக்களவையில் நிறைவேற்றி உள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தினை ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்