தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-08-21 15:23 GMT
ராமேஸ்வரம், 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகபட்டினத்தை சேர்ந்த  4 மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மேலும் அவர்களது நாட்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையில் உள்ள கங்கேசந்துரை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீன்வள உதவி இயக்குநர் குமரேசன் தெரிவித்தார்.  இது, கடந்த இரண்டு நாட்களில்,  இலங்கை கடற்படையினரால் செய்யப்பட்ட இரண்டாவது கைது ஆகும்.

இதையடுத்து, நாட்டின் படகு உரிமையாளர்கள் அளித்த புகார் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்