தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் - பாஜக
தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற அஸ்வின்குமார் உபாத்யாயா, இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள் என்றும், அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று விமர்சித்தார். ப.சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.