பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு, டீசல் விலை 10 காசுகள் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்துள்ளது.

Update: 2019-09-14 02:25 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடை பிடித்து வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.78ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 10 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.09 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகள்