தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் வருகிற 6ந்தேதி நடைபெறும்

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் வருகிற 6ந்தேதி ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-09-19 07:30 GMT
சென்னை,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த வருடம் ஆகஸ்டு 7ந்தேதி காலமானார்.  அவரது மறைவை அடுத்து கடந்த வருடம் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 6ந்தேதி ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் பொது செயலாளர் க. அன்பழகன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கடந்த வருடம் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், கட்சியின் சட்டதிட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்