நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-09-29 03:52 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–  போலி இரட்டை இருப்பிட சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் இந்திய இளைஞர்களின் கனவுகளை ‘நீட்’ தேர்வு சிதைத்து கொண்டிருக்கிறது. அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கி, சமீபத்திய ஆள்மாறாட்ட முறைகேடு வரை, ‘நீட்’ தேர்வு நம் மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ‘நீட்’ தேர்வுக்கு தடை விதிக்க அ.தி.மு.க. அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்