தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2019-10-07 23:51 GMT
சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆயுத பூஜை கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தை பின்பற்றி, ஆளுநர் மாளிகையில் பணியாளர்களுடன் இணைந்து தினசரி யோகா செய்து வருவதாகவும், தெலுங்கானா ஆளுநர் மாளிகையை பிளாஸ்டிக் இல்லா மாளிகையாக மாற்றியிருப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்