மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரை,
மதுரை உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் லாரியும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் உட்பட மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.