மழைநீர் சேகரிக்க தோண்டிய குழியில் 3 வயது சிறுவன் மூழ்கி பலி
விருதுநகர் அருகே மழைநீர் சேகரிப்புக்காக தோண்டிய குழியில் 3 வயது சிறுவன் மூழ்கி பலியானான்.
விருதுநகர்
ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த எம்.ருத்ரான் என்ற மூன்று வயது சிறுவன் ஒன்டிபுலினிகனூரில் உள்ள தனது தாத்தா மணிகண்டன் (60) வீட்டிற்கு சென்று இருந்தான்.
மணிகண்டன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே மூன்று அடிக்கு மேல் ஆழத்தில் ஒரு குழி தோண்டி இருந்தார்.
நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால், குழி மழைநீரில் நிரம்பி இருந்தது. இன்று காலை வெளியே வந்த சிறுவன் அந்த குழியில் விழுந்து மூழ்கி விட்டான் . இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிறுவன் கண்ணிசேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர், அங்கு டாக்டர் சிறுவன் இறந்து விட்டான் என்று அறிவித்தார். இது குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.