நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆட்சியர் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார்.

Update: 2019-10-30 15:46 GMT
நீலகிரி,

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  அங்கு மழை பொழிவு அதிகமுள்ள 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அறிவித்து உள்ளார்.

இதேபோன்று புதுச்சேரி, காரைக்காலில் கனமழையால் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை நாளை விடுமுறை அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்