நீட் தேர்வு: நீதிமன்றம் காட்டும் வழியில் மத்திய, மாநில அரசுகள் செல்ல வேண்டும் - மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விஷயத்தில் நீதிமன்றம் காட்டும் வழியில் மத்திய, மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-05 12:52 GMT
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதனை வழிமொழிந்துள்ளனர். இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய - மாநில அரசுகள் செல்ல வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்