ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு எதிராக ஜெ.தீபா வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கும் படங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-26 12:03 GMT
சென்னை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

இதே போல் கவுதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்