மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தொடர்மழை காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.