சென்னை தி.நகரில் அடுக்குமாடியின் 4வது தளத்தில் தீ விபத்து

சென்னை தி.நகரில் அடுக்குமாடி ஒன்றில் 4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2019-12-03 04:48 GMT
சென்னை,

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது.  இதன் 4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் 3 வாகனங்களில் வந்தனர்.  அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த அலுவலகம், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்குரியது என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்