திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்

திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவியுடன் தரிசனம் செய்தார்.

Update: 2019-12-24 14:14 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வருகை தந்துள்ளார். அவரது வருகையையொட்டி, திருநள்ளாறில் துணை ராணுவ வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், திருநள்ளாறு மட்டுமின்றி காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன.

ஜனாதிபதியுடன் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்