பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்
அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதை பலரும் உறுதிப்படுத்தி உள்ளனர். எனவே 1971-ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்க கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,
பழைய நிகழ்வுகளை பற்றி பேசுவதால் ரஜினிக்கு என்ன பி.எச்.டி. பட்டமா கொடுக்கப்போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் எனக்கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தி உள்ளார்.
அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.