விடுதலைக்கான வேள்வியை வளர்த்த நேதாஜி - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் புகழாரம்

விடுதலைக்கான வேள்வியை வளர்த்தவர் நேதாஜி என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2020-01-23 12:28 GMT
சென்னை,

நேதாஜியின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்துள்ளார். நேதாஜி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சிலை திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,

தூய்மை இந்தியா குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு பெற்றுள்ளார்.விடுதலைக்கான வேள்வியை வளர்த்த நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தார் என்றார்.

மேலும் செய்திகள்